Alaioli

உப்சி, மே 23 - தெருக்கூத்துகளாக இருந்து, மேடை நாடகங்களாக உருமாறி, இலக்கிய நாடகங்களாக வளர்ச்சிப் பெற்ற நாடகக்கலையை இன்றைய இளைஞர்களிடையே மீட்டுருவாக்கம் செய்யும் வகையில் உப்சி வளர்தமிழ் மன்ற ஏற்பாட்டில் கடந்த 23 மே சனிக்கிழமையன்று உப்சி வளாக ஒத்திகைத் திரையரங்கத்தில் நாடகச்சுடர் 2026 போட்டியானது அரங்கேறின.

உப்சி தமிழ்ப்பிரிவுத் தலைவர், இணைப்பேராசிரியர் முனைவர் கார்த்திகேஸ் பொன்னையா, உப்சி வளர்தமிழ் மன்ற மதியுரைஞர் இணைப்பேராசிரியர் முனைவர் மனோன்மணி தேவி அண்ணாமலை ஆகியோரின் ஆலோசனையால் இந்நிகழ்ச்சி முறையாகவும் சிறப்பாகவும் நடந்தேறின.

உப்சி வளர்தமிழ் மன்றத் தலைவர் செல்வன் கலையரசன் ஆறுமுகம் அவர்களின் வழிகாட்டுதலால் நிகழ்ச்சி இயக்குநர் செல்வி வனிதா நாகராஜன் அவர்களும் அவர் தம் செயலவையினரின் அயராத முயற்சியினால் இப்போட்டியானது வெற்றிகரமாக நடந்தேறின.

பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் இந்நிகழ்ச்சியைத் திறப்புரையாற்றி அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.
இவ்வாண்டு உப்சி நிகழ்ச்சிகளுக்காக 70 ஆயிரம் ரிங்கிட்டிற்கும் அதிகமான நன்கொடைகளை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மாநில அரசாங்கம் இதுபோன்ற பயனுள்ள நிகழ்ச்சிகளுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் நம்பிக்கைத் தெரிவித்தார்.

தேசிய அளவில் திருக்குறளை மையமாகக் கொண்டு இந்நாடகங்கள் அரங்கேறின. இப்போட்டியில் துவான்கு பைனூன் ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ ஆசிரியர் கல்விக் கழகம், சுல்தான் சைனல் அபிடின் பல்கலைக்கழகம், உப்சி பல்கலைக்கழகம் என மொத்தம் எட்டு குழுக்கள் பங்குப் பெற்றனர்.

இப்போட்டிக்கு நீதிபதிகளாக ஆஸ்கார் விருதும் கோல்டன் குளோப் விருதும் பெற்ற முதல் மலேசியத் திரைப்படத்தின் மூத்த நடிகர் திரு திவாகர் சுப்பையா அவர்களும் பூச்சாண்டி திரைப்படத்தின் இயக்குநர் திரு .விக்கினேஸ்வரன் கலியபெருமாள் அவர்களும் மாயா பசார், வெண்பா, ஐவர், தள்ளிப் போகாதே போன்ற மலேசியத் திரைப்படங்களில் நடித்த நாடறிந்த நடிகர் திரு தேவகுரு சுப்பையா அவர்களும் கலந்து கொண்டு மதிப்பெண்கள் வழங்கினர்.

கலந்துகொண்ட மாணவர்கள் அனைவரும் நடித்ததை விட கதைப்பாத்திரமாகவே வாழ்ந்தனர்.எதிர்காலத்தில் இன்று நடித்தவர்கள் நாளை பெரியதொரு கதாநாயகர்களாக வருவார்கள் என நீதிபதிகள் நம்பிக்கைத் தெரிவித்தனர்.

தேசிய நிலையிலான இப்போட்டியில் கலந்து கொள்வது மிகப்பெரிய விடயம் என்றும் நடித்த மாணவர்கள் அனைவரும் மேடை பயமின்றி நடித்தனர் என்றும் புகழாரம் சூட்டினர்.

5ஆம் நிலையில் சுல்தான் சைனல் அபிடின் பல்கலைக்கழக இளையரங்கம் குழுவினரும், 4 ஆம் நிலையில் உப்சி பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த விண்மீன் கதிர்களும் 3 ஆம் நிலையில் ஈப்போ ஆசிரியர் கல்விக் கழகத்தினைச் சேர்ந்த தீச்சுடர் குழுவினரும் 2 ஆம் நிலையில் ஆசிரியர் கல்விக் கழகம் துவான்கு பைனூன் வேதிக்கனல் குழுவினரும் முதலாம் நிலையில் துவான்கு பைனூனைச் சேர்ந்த அரங்க வில்லுகள் குழுவினரும் வாகைச் சூடினர்.

சிறந்தநடிகருக்கான விருதினை உப்சி பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த விண்மீன் கதிர்கள் குழுவினரில் “அருண்” கதைப்பாத்திரத்தில் நடித்த செல்வன் கிஷன் அவர்களும் சிறந்த கதைக்கு சுல்தான் சைனல் அபிடின் இளையரங்கம் குழுவினரும் வாகை சூடினர்.










மாநில செய்திகள்
பிபிபி கட்சியை மீண்டும் தேசிய முன்னணியில் இனைத்து கொண்டது தேசிய முன்னணி தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் பழனிவேல்.
ஆன்மிக சொற்பொழிவுகள்
கத்தோலிக்க அருங்கொடை மறுமலர்ச்சி எழுச்சிக் கூட்டம்- 2026 நான்கு மொழி பேசுபவர் கலந்து கொண்டனர்
மாநில செய்திகள்
ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி உடன் சாந்திப்பு
பள்ளி கல்வி
எஸ்.பி.எம் மாணவர்களுக்கு மடிக்கணினி அன்பளிப்பு - டத்தோ மரியதாஸ் கோபாலின் கல்விச் சேவை!
மாநில செய்திகள்
33 வது ஆண்டு பாலர் பள்ளியின் திடல் திறன் போட்டி..
மாநில செய்திகள்
MIC Eyes Fourth Seat as Johor Polls Loom
மாநில செய்திகள்
ஜொகூர் இந்து கருமகிரியை மையத்திற்கு மாநில முதல்வர் வருகை
மாநில செய்திகள்
Polis Buru Suspek Guna Mazda 6 Dalam Kes Curi Kabel Di Gelugor