Alaioli
அகல்யா
பட்டர்வொர்த், ஜூன் 5 -மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், பினாங்கு இந்தியர் வர்த்தக சங்கத்தின் ( உதவித் தலைவரும், பிரபல \'மாலியா பேக்கரி\' (Maliya Bakery) நிறுவனத்தின் உரிமையாளருமான டத்தோ மரியதாஸ் கோபால், எஸ்பிஎம் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை (Laptop) அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

ஆலயத் திருவிழாவில் கல்வி உதவி
பட்டர்வொர்த் அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு இந்த நற்காரியம் தற்பொழுது செய்யப்பட்டுள்ளது. கல்விக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையின் அடிப்படையில், பட்டர்வொர்த்தைச் சேர்ந்த எஸ்பிஎம் மாணவர் ஒருவருக்கு டத்தோ மரியதாஸ் மடிக்கணினியை வழங்கினார். அதே வேளையில், பினாங்கு, தஞ்சோங் பூங்கா பகுதியைச் சேர்ந்த மற்றொரு தகுதியுடைய மாணவருக்கும் கல்வி உபகரணங்கள் வழங்கித் தனது ஆதரவை நீட்டித்துள்ளார்.
சமூகப் பங்களிப்பு
டத்தோ மரியதாஸ் கோபால் பினாங்கு மாநிலத்தின் முன்னணி அரசு சாரா இயக்கங்களின் ஆலோசகராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் வணிகத் துறையில் மட்டுமின்றி, சமூகம், கல்வி, கொடை மற்றும் ஆன்மீகம் போன்ற பல துறைகளிலும் தொடர்ந்து தாராள மனதோடு பங்களிப்பு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய காலகட்டத்தில் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்குத் தொழில்நுட்பம் மிகவும் அவசியமானது.
மாநில செய்திகள்
பிபிபி கட்சியை மீண்டும் தேசிய முன்னணியில் இனைத்து கொண்டது தேசிய முன்னணி தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் பழனிவேல்.
ஆன்மிக சொற்பொழிவுகள்
கத்தோலிக்க அருங்கொடை மறுமலர்ச்சி எழுச்சிக் கூட்டம்- 2026 நான்கு மொழி பேசுபவர் கலந்து கொண்டனர்
மாநில செய்திகள்
ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி உடன் சாந்திப்பு
பள்ளி கல்வி
எஸ்.பி.எம் மாணவர்களுக்கு மடிக்கணினி அன்பளிப்பு - டத்தோ மரியதாஸ் கோபாலின் கல்விச் சேவை!
மாநில செய்திகள்
33 வது ஆண்டு பாலர் பள்ளியின் திடல் திறன் போட்டி..
மாநில செய்திகள்
MIC Eyes Fourth Seat as Johor Polls Loom
மாநில செய்திகள்
ஜொகூர் இந்து கருமகிரியை மையத்திற்கு மாநில முதல்வர் வருகை
மாநில செய்திகள்
Polis Buru Suspek Guna Mazda 6 Dalam Kes Curi Kabel Di Gelugor