Alaioli
செபராங் ஜெயா, மே 30 – கெடா மாநிலம் கூலிமை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் காமாச்சி சமூக நல இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற தேநீர் விருந்து நிகழ்ச்சியில் மொத்தம் ரிம 3,4500.00 நிதி திரட்டப்பட்டது.இந்த நிகழ்ச்சி செபராங் ஜெயாவில் அமைந்துள்ள தெ லெயிட் தங்கும் விடுதியில் சிறப்பாக நடைபெற்றது. காமாச்சி சமூக நல இயக்கத்தின் தலைவர் டாக்டர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்வேறு சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சுந்தராஜூ சோமு, காமாச்சி சமூக நல இயக்கத்தின் சேவைகளைப் பாராட்டியதுடன், தனது ஆதரவாக ரிம 30,000 நிதி வழங்கினார்.

அதேவேளை, தெ லெயிட் தங்கும் விடுதியின் நிறுவனர் டான் ஶ்ரீ இராமேஷ் தனது நிறுவனத்தின் சார்பில் ரிம 50,000நிதியுதவியை வழங்கினார். மேலும், கமாலியா பேக்கரி நிறுவனத்தின் உரிமையாளரும் சமூக சேவையாளருமான டத்தோ மரியதாஸ் கோபால் ரிம 15,000 வழங்கினார்.
தொழிலதிபர்களான டத்தோ தேவேந்திரன் மற்றும் அட்னான் அப்துல்லா ஆகியோர் தலா ரிம 10,000 வழங்கி இந்நிதி திரட்டலுக்கு பங்களித்தனர்.இதேவேளை, அலை ஒளி சமூக ஊடகம் சார்பில் ரிம 1,000 நிதியுதவி வழங்கப்பட்டது. குழந்தைகள் காப்பகத்திற்காக புதிய குடியிருப்பு வீடு வாங்கும் முயற்சிக்கு அலை ஒளி ஊடகத்தின் இயக்குநர்களான ஆர். ரமணி மற்றும் செ. குணாளன் ஆகியோர் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

நிகழ்வில் உரையாற்றிய டத்தோ ஶ்ரீ சுந்தராஜூ சோமு, காமாச்சி குழந்தைகள் காப்பகத்திற்காக ஐந்தாவது குடியிருப்பு வீட்டை வாங்கும் நோக்கில் இந்த தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.“கொடுப்பதில் உள்ள மகிழ்ச்சியும், பிறருக்கு உதவுவதில் கிடைக்கும் மனநிறைவும் சமூகத்தில் மேலும் வளர வேண்டும். குழந்தைகள் காப்பகத்தை சிறப்பாக நடத்தி வரும் டாக்டர் கருணாநிதியின் அர்ப்பணிப்பான சேவைக்கு வழங்கப்படும் இந்த ஆதரவு, நன்கொடையாளர்களின் கருணைமிக்க மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது,” என அவர் குறிப்பிட்டார்.
இறுதியாக, இந்த நிதி திரட்டல் நிகழ்ச்சிக்கு ஆதரவளித்த அனைத்து நன்கொடையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு காமாச்சி சமூக நல இயக்கத்தின் தலைவர் டாக்டர் கருணாநிதி தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.


மாநில செய்திகள்
பிபிபி கட்சியை மீண்டும் தேசிய முன்னணியில் இனைத்து கொண்டது தேசிய முன்னணி தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் பழனிவேல்.
ஆன்மிக சொற்பொழிவுகள்
கத்தோலிக்க அருங்கொடை மறுமலர்ச்சி எழுச்சிக் கூட்டம்- 2026 நான்கு மொழி பேசுபவர் கலந்து கொண்டனர்
மாநில செய்திகள்
ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி உடன் சாந்திப்பு
பள்ளி கல்வி
எஸ்.பி.எம் மாணவர்களுக்கு மடிக்கணினி அன்பளிப்பு - டத்தோ மரியதாஸ் கோபாலின் கல்விச் சேவை!
மாநில செய்திகள்
33 வது ஆண்டு பாலர் பள்ளியின் திடல் திறன் போட்டி..
மாநில செய்திகள்
MIC Eyes Fourth Seat as Johor Polls Loom
மாநில செய்திகள்
ஜொகூர் இந்து கருமகிரியை மையத்திற்கு மாநில முதல்வர் வருகை
மாநில செய்திகள்
Polis Buru Suspek Guna Mazda 6 Dalam Kes Curi Kabel Di Gelugor