Alaioli
பக்தர்கள் வழிபடும் வழிபாட்டுத் தலங்கள் விற்பனை மையங்கள் அல்ல! - பாப்பா ராய்டு எச்சரிக்கை

எஸ்.எஸ்.மணிமாறன்

ஷா ஆலம் ஏப்ரல் 21- பக்தர்கள் சென்று தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வண்ணம் வீட்டில் இருந்து கொண்டு வரப்படும் மலர், பழங்கள், பொங்கல்  போன்ற காணிக்கைகளை இறைவன் சன்னதியில் வைத்து படைத்து வழிபடும் வழிபாட்டுத் தலங்கள்,


அது ஒரு போதும் விற்பனை மையங்கள் அல்ல, அது இறைவன் வீற்றிருக்கும் பக்தர்கள் சென்று குறைகளைச் சொல்லி மனச்சாந்தி பெறும் அமைதியான சூழல் நிறைந்த பக்தித் தலம் என்று மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


துஷ்ட மனிதரையும் மனம் திருந்த வைத்து நல்ல மனிதராக மாற்றி அமைக்க வல்ல இறைவன் அமர்ந்திருக்கும் வழிபாட்டுத் தலங்கள் , வியாபார நோக்கில் ஆலய நிர்வாகத்தினர் உட்பட யாவரும் செயல்படும் எண்ணத்தை உடனடியாக மறந்து விட்டு, விளையாட்டுக்காகக்கூட அதைப் பற்றி பேசாமல், அப்படிப்பட்ட கொள்கையை உடனே மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அவர் அலை ஒளி செய்தியாளர் வாயிலாக தமது வேண்டுகோளை முன் வைத்தார்.


மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினராக மாநில அரசின் வாயிலாக பதவி ஏற்ற காலம் தொட்டு, மாநில அளவில் செயல்படும் வழிப்பாட்டுத் தலங்கள், தமிழ்ப் பள்ளிகள், மக்கள் நலனுக்காக பாடுபடும் சமூக அமைப்புகள், மாநில அரசின் ஐ..சீட் உதவிப் பொருள் திட்டங்கள் என ஏழை மாணவர்கள் வளர்ச்சி , மக்கள் நலன் கருதி தமது பணி செவ்வன தொடரும் என்று பாப்பா ராய்டு அலை ஒளியிடம் கூறினார்.


எனவே, வழிபாட்டுத் தலங்களை ஒருபோதும் விற்பனைத் தலங்களாக மாற்றி பக்தர்கள் வெறுப்புக்கும்  வேண்டாத தேவையற்ற பிரச்சினைகளுக்கும் காரணமாக ஆலயப் பொறுப்பாளர்கள் இருக்க வேண்டாம் என்று பாப்பா ராய்டு எச்சரித்துள்ளார் - Alaiolinews

Leave a Comment
Trending News