Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 20 - மாநில அரசு செயலகத்தின் வாயிலாக 13 குர்ட் வாரா வழிபாட்டுத் தலங்களுக்கு 95, 200 ரிங்கிட் மானியம் வழங்கப்பட்டு சீக்கிய ஆலயத் தலைவர்களிடம் அந்த நிதி ஒப்படைக்கப் பட்டதாக மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.

அதே வேளையில், சிறப்பு உதவி நிதியாக பெட்டாலிங் டின் சீக்கிய ஆலயச் சங்கத்திற்கு 50 ஆயிரம் ரிங்கிட் காசோலையாக அதன் பொறுப்பாளர்களிடம் எடுத்து வழங்கப் பட்டதாக அவர் கூறினார்.

மேலும், சீக்கிய வம்சாவளியினரைச் சேர்ந்த எஸ்பிஎம் 2025 தேர்வில் சிறந்த அடைவு நிலையை எட்டிப் பிடித்த 20 மாணவர்கள் அதற்கான ஊக்குவிப்புத் தொகையை தம்மிடம் இருந்து பெற்றுக் கொண்டதாக பாப்பா ராய்டு அலை ஒளியிடம் கூறினார்.

நேற்று இரவு இங்கு, பெட்டாலிங் ஜெயா லாமான் எம்பிபிஜே மண்டபத்தில் நடைபெற்ற சீக்கியர்களின் வைசாக்கி புத்தாண்டு கலை விழா கொண்டாட்டம் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த பாப்பா ராய்டு மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் கடந்த ஆண்டில் கிள்ளான் குர்ட்வாரா சாஹிப்பில் இதே போன்றதொரு சீக்கியர் வைசாக்கி புத்தாண்டு கலை விழா கொண்டாட்டம் நடைபெற்றதை பாப்பா ராய்டு தமது வாழ்த்துரையில் நினைவு படுத்தினார்.

முன்னதாக, பங்ரா இசைக் கலைஞர்கள் வரவேற்புடன் அவர் நிகழ்ச்சி மேடைக்கு அழைத்து வரப்பட்டார்.

சுவையான இரவு உபசரிப்புடன் சீக்கியரின் பண்பாடுகளை எடுத்துக் கூறும் ஆடல், பாடல் அனைத்தும் விருந்தினருக்கு கண்ணுக்கு விருந்தாக அமைந்தது எனலாம்.
சீக்கியர் வைசாக்கி புத்தாண்டு கலை விழாவில் பெட்டாலிங் ஜெயா பண்டாராயா டத்தோ பண்டார் டத்தோ ஹாஜி முகமட் ஷாரி ஹாஜி சமிங்கோன், துவான் மோகான் சிங் மற்றும் 24 குர்ட் வாரா சங்கங்களின் தலைவர்கள் மற்றும் அழைக்கப்பட்ட பிரமுகர்கள், பாப்பா ராய்டுவின் துணைவியார் திருமதி மகேஸ்வரி, அவரது சிறப்பு அதிகாரி திருமதி காந்திமதி,என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சீக்கியர் வைசாக்கி புத்தாண்டு கலை விழாவில் கலந்து கொண்டனர்.- Alaiolinews







ஜொகூர்
மக்கள் சக்தி ஜொகூர் அமைப்பு உறுதிப்படும் – தேர்தலை நோக்கிய செயல்திட்டம் தீவிரம்
ஜொகூர்
403 பிரச்சினைகள் முன்வைப்பு – தாங்காக் செயல் கூட்டம் மூலம் தீர்வில் வேகம், ஜொகூர் அரசு உறுதி
ஷா ஆலம்
சிலாங்கூர் மாநிலம் அபரிமிதமான வளர்ச்சியை நோக்கிப் பீடு நடை போடுகிறது= சிலாங்கூர் எப்எம் 100.9 நேரலையில் பாப்பா ராய்டு புகழாரம்.
பந்திங்
மலர்ந்திருக்கும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பந்திங்கில் மே 1 இல் சித்திரைப் புத்தாண்டு கலை விழா கொண்டாட்டம்= பாப்பா ராய்டு தகவல்.
பேராக்
நாட்டில் எரிசக்தி விநியோகம் பாதுகாப்பாக உள்ளது ; பேரா மாநில அரசின் மனிதவள இலாகா டத்தோ சிவநேசன் கூறுகிறார்..!
சிலாங்கூர்
சிலாங்கூர் மாநில அளவில் வேலை தேடி வருவோருக்கு ஜோப் கேர் சிலாங்கூர் கை கொடுத்து உதவும்!- பாப்பா ராய்டு அறிவிப்பு
பந்திங்
மக்கள் நலம் கருதி மகளிர் ஆற்றும் சேவை அளப்பரியது= உமா நந்தினி.
சிலாங்கூர்
சிலாங்கூர் மாநில அளவில் ஏழ்மை நிலையைத் துடைத்தொழிப்பதில் 0.8 சதவீதம் வறுமைநிலை நடப்பில் உள்ளது!- பாப்பா ராய்டு தகவல்