Alaioli
இரண்டாம் ஆண்டு உயர்கல்வி மேற்கொண்டு வரும் கலைவர்ஷினிக்கு 1,000 ரிங்கிட் உதவி நிதி; வீரப்பன் தகவல்.

எஸ்.எஸ்.மணிமாறன்.

சிரம்பான் மார்ச் 11.  பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி மேற்கொண்டு வரும் இந்திய மாணவி பி. கலைவர்ஷினிக்கு ஆயரிம் ரிங்கிட் உதவிநிதி வழங்கியதாக நெகிரி மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீரப்பன் சுப்ரமணியம் அலை ஒளி செய்தியாளரிடம் தகவல் தெரிவித்தார். ரெப்பா சட்ட மன்ற மக்கள் சேவை மையத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிக்கு, இந்தக் கல்வி நிதி முன்னெடுக்கப்பட்டு வழங்கப் பட்டதாக சட்டமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.


ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த இந்திய மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள தாம், அவர்களின் பட்டதாரி படிப்பு இடையே நின்று விடாமல் இருப்பதற்கு  உரிய நேரத்தில் தாம் இந்தக் கல்வி நிதியை தகுதி பெற்றவர்களுக்கு சட்ட மன்ற அலுவலகத்தின் வாயிலாக தொடர்ந்து வழங்கி வருவதாக வீரப்பன் அலை ஒளியிடம் தெரிவித்தார். ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு இதன்வழி தங்களது சுமைகளைக் குறைப்பதற்கான நடவடிக்கையில் நெகிரி மாநில அரசு கல்வி உதவிநிதியைத் தொடர்ந்து வழங்கி உதவி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Leave a Comment
Trending News