Alaioli
ஆன்மிகத் தலைமையியல் குறித்து அர்த்தமுள்ள உரையாடல்

ஆர்.ரமணி

புக்கிட் மெர்தாஜம் - புக்கிட் மெர்தாஜமில் அமைந்துள்ள பிரம்ம குமாரி மையத்தில், இந்த அமர்விற்கு பிரமா குமாரிஸ் அறக்கட்டளையின் மலேசிய தலைவர் சகோதரர் பி.கே. புய் தலைமை தாங்கினார்.




நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் பல்வேறு துறைகளில் இருந்து வந்திருந்தனர்.


இந்த உரையாடல், தலைமையின் முக்கியத்துவம் மற்றும் அதனுடன் இணைந்துள்ள ஆன்மிகப் பார்வைகள் குறித்து ஆழமான சிந்தனைகளை ஏற்படுத்தியது.


குறிப்பாக, ஒழுக்கம், மன அமைதி, தன்னுணர்வு, மற்றும் மதிப்புகள் சார்ந்த முடிவெடுப்பின் அவசியம் குறித்து பல முக்கிய அம்சங்கள் வலியுறுத்தப்பட்டன.


இந்த நிகழ்ச்சியில் டத்தோ இரமசந்திரன் டத்தோ ஜி.பி துறைசாமி உடன் கலந்து சிறப்பித்தனர்.



நிகழ்ச்சியின் போது, ஒரு நல்ல தலைவராக உருவாக ஆன்மிகம் எப்படி வழிகாட்டுகிறது என்பதையும், மனிதநேயத்தையும் சமநிலையையும் காக்கும் தலைமைத்துவத்தின் அவசியத்தையும் பேச்சாளர்கள் எடுத்துரைத்தனர்.


இந்த அர்த்தமுள்ள உரையாடல், கலந்து கொண்ட அனைவருக்கும் புதிய பார்வையையும் ஊக்கத்தையும் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.-Alaiolinews

Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News